மட்டக்களப்பு பிரபல பெண்கள் பாடசாலை மாணவியுடன் சர்ச்சையில் சிக்கிய பிள்ளையானின் சகா!

23 650f6e4f9b1b1

மட்டக்களப்பு மாவட்ட ஒரு சில மக்கள் இணைந்து அமைச்சர்கள், அமைச்சுப்பதவிகள் வேண்டும் என்று சொல்லி உருவாக்கி விட்டார்கள் ஆனால் அதுவே இன்று எமது மாவட்டத்திற்கான சாபக்கேடாக மாறிவிட்டது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனருத்தாணம் செய்யப்படும் கிரான் ஆதி வைரவர் ஆலயத்தின் புனரமைப்பு பணிகளை பார்வையிடுவதற்கு நேற்று (2) மாலை வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா,சாணக்கியன் ஆலய வெளி முன்றலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான குடி நீர் திட்டத்தை நான் கொண்டு வந்தபோது அதை அம்பாறை மாவட்டத்திற்கு மாற்றி விட்டார்கள்.இவ்வாறு பல விடயங்களை அவர்கள் தடுக்கிறார்கள்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாதவனை பிரச்சினைக்கு கூட இன்னும் தீர்வு எட்டப்படாமல் உள்ளது.

இது இவ்வாறிருக்க தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலிலே சரியான ஒருவரை தேர்ந்து வாக்களித்து எமது அரசியல் பிரச்சினைக்கான தீர்வுகளை பெற முயற்சிக்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version