tamilni 318 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டில் கடும் வறட்சி: இலட்சக்கணக்கானோர் பாதிப்பு

Share

நாட்டில் கடும் வறட்சி: இலட்சக்கணக்கானோர் பாதிப்பு

நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக இதுவரை 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 81 ஆயிரத்து 162 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 80 ஆயிரத்து 247 பேர் பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் 18 ஆயிரத்து 992 குடும்பங்களைச் சேர்ந்த 63 ஆயிரத்து 269 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் ஊவா மாகாணத்தின், மொனராகலை மற்றும் பதுளை மாவட்டங்களில் 6 ஆயிரத்து 253 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மாகாணத்தில் 6 ஆயிரத்து 367 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 21 ஆயிரத்து 930 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நிலத்தடி நீருக்கும பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதுவரை பெறப்பட்ட நீர் மாதிரிகளின் படி, எந்தவொரு நிலத்தடி நீரும் அருந்துவதற்கு உகந்தது அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...