2 13
இலங்கைசெய்திகள்

அநுர கட்சிக்குள் குழப்பம் : பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு எம்.பிக்கள் பலர்

Share

அநுர கட்சிக்குள் குழப்பம் : பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு எம்.பிக்கள் பலர்

தேசிய மக்கள் சக்திக்குள் காணப்படும் பிரச்சினைகளால் கணிசமான ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி (Hector Appuhamy) தெரிவித்ததுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “அமைச்சர்களின் அழுத்தங்களாலேயே ஓரிரு மாதங்களுக்குள் 6 நிறுவனத்தலைவர்கள் பதவி விலகியுள்ளனர்.

தற்போதுள்ள 159 ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கனிசமானோர் இவ்வாண்டுக்குள் நிச்சயம் பதவி விலகுவார்கள்.

அமைச்சொன்றின் செயலாளருக்கு எதிராக மேலதிக செயலாளர் ஒருவர் தனது உரிமைக்காக நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்குள் அனுபவம் தொடர்பான பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அதிகாரத்துக்கு வர முன்னர் நாமல் கருணாரத்ன போன்றோர் வயல்களில் இறங்கி முதலைக் கண்ணீர் வடித்து போராட்டங்களை முன்னெடுத்தமையை, தற்போது விவசாயிகள் அவர்களுக்கு நினைவுபடுத்துகின்றனர்.

தேர்தலுக்கு முன்னர் நெல் கிலோ ஒன்றுக்கான உற்பத்தி செலவு 160 ரூபா எனக் கூறியவர்கள் இன்று அதனை விடக் குறைவான நிர்ணய விலையையே அறிவித்திருக்கின்றனர்.

அவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நெல் ஆலை உரிமையாளர்களின் ஒத்துழைப்பு கிடைத்தமையால் அவர்களுக்கு இலாபம் கிடைக்கக் கூடிய தீர்மானங்களையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

இதனால் அப்பாவி சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இவற்றுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பதற்காக மக்கள் வீதிக்கிறங்கி போராடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர்” என்றார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 30 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீடு வாங்குவதற்கு உலகின் விலை கூடிய நகரமானது கொழும்பு! – 55 ஆண்டுகால வருமானத்தைச் சேமித்தால் மட்டுமே சாத்தியம்.

சர்வதேச வாழ்க்கைச் செலவு தரவுத்தளமான Numbeo வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான சொத்து விலைச் சுட்டெண்ணில் (Property...

image 1200x800 34 1
செய்திகள்அரசியல்இலங்கை

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஜனநாயகத்திற்கே ஆபத்து! – மனித உரிமை ஆர்வலர் அம்பிகா சற்குணநாதன் எச்சரிக்கை!

இலங்கை அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (PSTA), தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச்...

image 1200x800 36 1
செய்திகள்உலகம்

மலையுச்சியில் காதலியைப் பலிகொடுத்த வீரர்? – ஆஸ்திரியாவில் பரபரப்பான அலட்சியக் கொலை வழக்கு விசாரணை!

ஆஸ்திரியாவின் மிக உயர்ந்த சிகரமான கிராஸ்க்லோக்னரில் (Grossglockner – 3,798 மீட்டர்) கடந்த ஆண்டு ஜனவரி...

image 1200x800 37 1
உலகம்செய்திகள்

மத்திய கிழக்கில் போர் மேகம்: ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் கடைசி எச்சரிக்கை! – போர்க்கப்பலை அனுப்பியது அமெரிக்கா!

ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்...