இலங்கைசெய்திகள்

தமிழர் காணிகளில் 14 ஆயிரம் சிங்களவர்கள் குடியேற்றம் – ஒப்புக்கொண்ட எம்.பி

Share
tamilni 409 scaled
Share

தமிழர் காணிகளில் 14 ஆயிரம் சிங்களவர்கள் குடியேற்றம் – ஒப்புக்கொண்ட எம்.பி

சிங்களப் பகுதிகளில் தமிழ் மக்கள் வசிக்க முடியுமாயின், ஏன் தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்கள மக்கள் வசிக்க முடியாது என அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலனுடனான சந்திப்பில் பெரும்பான்மை சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வெளிப்படுத்தியுள்ளார்.

எனினும் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் தமிழ் மக்களின் காணிகளுக்குரிய அனுமதிப்பத்திரங்கள் மீளெடுக்கப்பட்டு 14 ஆயிரத்திற்கும் அதிகமான சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டமை தொடர்பாக தாம் முன்வைத்த கருத்தை சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்றுக்கொண்டதாகவும் ஐ.பி.சி தமிழுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டதாகவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...