24 6631c94e25d06
இலங்கைசெய்திகள்

ஆயிரக்கணக்கான பயணிகளுடன் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த கப்பல்

Share

ஆயிரக்கணக்கான பயணிகளுடன் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த கப்பல்

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு முதல் முறையாக ‘செரினேட் ஒப் த சீஸ்’ (Serenade of the Seas) எனும் உல்லாசக் கப்பல் நேற்று முன்தினம் (29) வருகை தந்துள்ளது.

இந்த கப்பலில் 1,950 பயணிகள் மற்றும் 890 பணியாளர்கள் வருகை தந்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த பத்தாவது கப்பல் இது என குறிப்பிடப்படுகின்றது.

2003 ஆம் ஆண்டு முதன் முதலில் கடல் பயணத்தை ஆரம்பித்த ‘செரினேட் ஒப் த சீஸ்’ கப்பலை சர்வதேச ரோயல் கரீபியன் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

தொலைதூர அயல்நாட்டு இடங்களுக்கு பயணிப்பதற்காக இந்த கப்பல் கட்டப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த கப்பல் அடுத்த பயணத்தை கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
08 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனித புதைகுழி: ஏப்ரல் 20-ல் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் செம்மணி மனித புதைகுழி வழக்கு, நேற்று (12) யாழ்ப்பாண நீதவான்...

07 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அல்லைப்பிட்டி சிறுவன் உயிரிழப்புச் சம்பவம்: விசாரணைகளை கொழும்பு மாற்ற ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவு!

கடந்த பெப்ரவரி மாதம் 10-ஆம் திகதி அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 17...

06 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய எரிபொருள் கொள்வனவு: இலங்கை மற்றும் ரஷ்யா இடையிலான உயர்மட்ட கலந்துரையாடல்!

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சமாளிக்கும் நோக்கில்,...

05 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டிகைக் காலத்தில் இணைய மோசடிகள் அதிகரிப்பு: எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர பிரிவு அறிவுறுத்தல்!

எதிர்வரும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு, இணையத்தில் பகிரப்படும் போலியான விளம்பரங்கள் மற்றும் இணைப்புகள் (Links) மூலம்...