images 3 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

செம்மணி நினைவுத்தூபி மீண்டும் சேதம்: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் முறைப்பாடு!

Share

செம்மணியில் அமைந்திருந்த அணையா விளக்குப் போராட்ட நினைவுத்தூபி மீண்டும் இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யுமாறு கோரி யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை ஜனாதிபதி அனுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் (NPP) யாழ். மாநகர சபை உறுப்பினர் சண்முகநாதன் பிரதீபன் செய்துள்ளார்.

செம்மணிப் படுகொலைக்கு நீதி கோரி கடந்த ஜூன் மாதம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் நினைவாகச் செம்மணியில் புதிதாக இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டிருந்தது.

கடந்த ஒக்டோபர் மாதம் இனந்தெரியாதோரால் இந்த நினைவுத்தூபி முதன்முதலில் இடித்தழிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், உடனடியாக புதிய நினைவுத்தூபி மீளவும் நிர்மாணிக்கப்பட்டது.

தற்போது, மீண்டும் இனந்தெரியாதோரால் இத் தூபி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 8) அன்று இடித்தழிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தூபியைச் சேதமாக்கிய சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வேண்டும் என அரச கட்சியினரே (NPP) யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...