images 3 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

செம்மணி நினைவுத்தூபி மீண்டும் சேதம்: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் முறைப்பாடு!

Share

செம்மணியில் அமைந்திருந்த அணையா விளக்குப் போராட்ட நினைவுத்தூபி மீண்டும் இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யுமாறு கோரி யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை ஜனாதிபதி அனுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் (NPP) யாழ். மாநகர சபை உறுப்பினர் சண்முகநாதன் பிரதீபன் செய்துள்ளார்.

செம்மணிப் படுகொலைக்கு நீதி கோரி கடந்த ஜூன் மாதம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் நினைவாகச் செம்மணியில் புதிதாக இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டிருந்தது.

கடந்த ஒக்டோபர் மாதம் இனந்தெரியாதோரால் இந்த நினைவுத்தூபி முதன்முதலில் இடித்தழிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், உடனடியாக புதிய நினைவுத்தூபி மீளவும் நிர்மாணிக்கப்பட்டது.

தற்போது, மீண்டும் இனந்தெரியாதோரால் இத் தூபி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 8) அன்று இடித்தழிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தூபியைச் சேதமாக்கிய சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வேண்டும் என அரச கட்சியினரே (NPP) யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

22727102 s
செய்திகள்விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் கால்பந்து அட்டவணை வெளியீடு: 48 அணிகள் பங்கேற்கும் திருவிழா ஜூன் 11 இல் ஆரம்பம்!

உலக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிபா...

images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக...

articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,...