tamilnaadi 93 scaled
இலங்கைசெய்திகள்

வெடுக்குநாறிமலையில் கஜேந்திரன் எம்.பிக்கு இரவில் நடந்தது என்ன..!

Share

வெடுக்குநாறிமலையில் கஜேந்திரன் எம்.பிக்கு இரவில் நடந்தது என்ன..!

வவுனியா வெடுக்குநாறி மலையில் நேற்றையதினம் சம்பவித்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

வெடுக்குநாறிமலை ஆலயத்தில் நேற்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது பொலிஸார் தாக்கியுள்ளனர்.

இது மட்டுமன்றி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற மரியாதையை அவருக்கு பொலிஸார் கொடுத்திருக்கவில்லை.

இதுமட்டுமன்றி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனை தாக்கி, பொலிஸார் கைது செய்ய முயன்றதுடன், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் என தெரியவந்ததையடுத்து, அவரை தூக்கிச் சென்று ஆலய முன்றலில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

வெடுக்குநாறிமலையில் நேற்றையதினம் இடம்பெற்ற பூஜை நிகழ்வுகளின்போது மாலை ஆறு மணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடித்துவிட்டு செல்லுமாறு தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் ஆறு மணிக்கு பின்னரும் வழிபாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பொலிஸார் இவ்வாறான அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

இது மட்டுமன்றி மாலை வேளையில் குடிநீருடன் ஆலயத்திற்கு உழவு இயந்திரம் வந்தபோது அந்த வாகனம் காட்டுப் பகுதியில் விபத்துக்குள்ளானதில். அதில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 59
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் புதிய சட்டம்: பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை வழங்க அனுமதி!

இஸ்ரேலியர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளிகளாகக் காணப்படும் பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை (Death Penalty)...

Untitled 58
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

எரிபொருள் மானியத்திற்குத் தடையுமில்லை: இலங்கையில் தற்போதைய விலையிலேயே விநியோகம் தொடரும்!

இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள எரிபொருள் விலை மானியத்தை முன்னெடுத்துச் செல்வதற்குச் சர்வதேச நாணய நிதியம் (IMF)...

Untitled 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் எரிசக்தி அவசரகால நிலை அறிவிக்கப்படாது: தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும்!

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றத்தினால் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz)...

Untitled 56
உலகம்செய்திகள்

மத ரீதியாகப் போரை நியாயப்படுத்துவதை ஏற்க முடியாது: திருத்தந்தை லியோவின் முக்கிய உரை!

மத்திய கிழக்கில் போர் பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், வன்முறை மற்றும் அழிவுக்கான வேண்டுதல்களைக் கடவுள்...