18
இலங்கைசெய்திகள்

சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பணத்திற்காக விற்பனை செய்யப்பட்ட சிறுமிகள்

Share

சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பணத்திற்காக விற்பனை செய்யப்பட்ட சிறுமிகள்

கண்டியில் உள்ள அரச நன்னடத்தை திணைக்களத்திற்கு சொந்தமான சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சிறுமிகளை பல்வேறு நபர்களுக்கு பணத்திற்காக விற்பனை செய்ததாக கூறப்படும் சிறுவர் தடுப்பு நிலைய கண்காணிப்பாளர் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நீதிமன்ற உத்தரவுக்கமைய நன்னடத்தை திணைக்களத்தின் மேற்பார்வையில் இந்த தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுமிகளை சந்தேகநபர் பணத்திற்கு விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மடத்துகம பொலிஸ் நிலையத்தில் வசிக்கும் 17 வயதுடைய யுவதி ஒருவர் கடந்த 8 ஆம் திகதி இரவு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிறுவர் தடுப்பு நிலையத்தின் உதவியாளர் ஒருவர் சிறுமிகளை தவறான நடவடிக்கைகளுக்காக அதே தடுப்பு முகாமில் தேவையான அறை வசதிகளை செய்து கொடுத்து பணத்திற்கு விற்றுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த ஏப்ரல் மாதம் சிறுமியொருவர் 06 ஆண்களுக்கு பணத்திற்காக விற்கப்பட்டுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுவர் தடுப்பு நிலையத்தில் உள்ள மருத்துவ அறை இந்த நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சிறுமியின் பாதுகாப்பிற்காக தற்போது அவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த 9 ஆம் திகதி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...