இலங்கையில் குத்தகை செலுத்தாத வாகனங்கள் தொடர்பில் அமைச்சர் உத்தரவு
இலங்கைசெய்திகள்

இலங்கையில் குத்தகை செலுத்தாத வாகனங்கள் தொடர்பில் அமைச்சர் உத்தரவு

Share

இலங்கையில் குத்தகை செலுத்தாத வாகனங்கள் தொடர்பில் அமைச்சர் உத்தரவு

வங்கிகளும், நிதி நிறுவனங்களும் குத்தகை செலுத்தாத வாகனங்களை உரிமையாளரிடமிருந்து ஆட்சேபனை இல்லாத பட்சத்தில் மாத்திரமே மீளப்பெற்றுக்கொள்ள முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, வாகனங்களை மீளப்பெறுவதற்கு பரேட் சட்டம் (Parate execution) நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பரேட் அதிகாரத்தின் கீழ், வங்கி அல்லது நிதி நிறுவனம் கடன் தொகை 50 இலட்சம் ரூபாவைத் தாண்டினால் மாத்திரமே வாகனத்தை பறிமுதல் செய்ய முடியும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் நேற்று நாடாளுமன்றத்தில் பரேட் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 173 சந்தர்ப்பங்களில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உட்பட 19 அமைப்புகளால் பரேட் சட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...