15 n
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு: பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவல்

Share

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு: பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவல்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய(priyantha-weerasuriya) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கை தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானத்தின் பின்னர் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாதுகாப்பு விடயங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரியந்த வீரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பொது பாதுகாப்பு அமைச்சினால் இந்த மதிப்பீட்டு அறிக்கை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டாம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக சில தரப்புக்களில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

எனினும் குறித்த செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பிலான அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...