1 7
இலங்கைசெய்திகள்

பெட்ரோலின் விலை 5000 ரூபாவாக அதிகரிக்கலாம்: திரைமறைவில் இரகசிய திட்டம்

Share

பெட்ரோலின் விலை 5000 ரூபாவாக அதிகரிக்கலாம்: திரைமறைவில் இரகசிய திட்டம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிக்க சஜித் பிரேமதாச, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச மற்றும் தம்மிக்க பெரேரா ஆகியோர் இரகசிய சதித்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பீ ஹரிசன் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்கி, பொதுஜன பெரமுனவுக்கு எதிர்க்கட்சி பலத்தை பெற்றுக் கொடுப்பதே இதன் நோக்கமாகும் என அவர் கூறியுள்ளார்.

இந்த குழு பல நாட்களாக கூடி இந்த கலந்துரையாடலை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாடு மீண்டும் தோல்வியடைந்தால் ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 5000 ரூபாவாகவும், ஒரு மூட்டை உரம் 50,000 ரூபாவாகவும் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...