21
இலங்கைசெய்திகள்

சி.ஐ.டியிடம் பிள்ளையான் அம்பலப்படுத்திய பெயர்!

Share

சி.ஐ.டியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அம்பலப்படுத்திய தகவல்களின்படி மேலும் பலரிடம் குற்றப்புலனாய்வு துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதன்படி சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில், அவருடன் சிறையில் இருந்த கலீல் என்ற புலனாய்வு அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த நபரை சிஐடியினர் விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலனாய்வு அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த குறித்த நபர், பிள்ளையானை என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் நீண்ட காலமாக தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

பிள்ளையானின் பெயரில் சில கடிதங்களை அவர் எழுதியுள்ளதாகவும் சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

பிள்ளையானுடன் இருந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் எட்வின் சில்வா கிருஷ்ணன் ராஜா, ரங்கசாமி கனகநாயகம் மற்றும் வினோத் ஆகிய மூன்று பேரிடமும் எதிர்காலத்தில் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...