19 13
இலங்கைசெய்திகள்

சிரிய ஜனாதிபதி குடும்பத்துக்கு சொந்தமான ரகசிய பதுங்கு குழி : வெளியான காணொளி

Share

சிரிய ஜனாதிபதி குடும்பத்துக்கு சொந்தமான ரகசிய பதுங்கு குழி : வெளியான காணொளி

சிரிய (Syria) ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் (Bashar al Assad) குடும்பத்திற்கு சொந்தமான பதுங்கு குழி ஒன்றை வெளிப்படுத்தும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் படையின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் சிரிய இராணுவம் பின்வாங்கியதை அடுத்து அந்த நாட்டின் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் சிரியாவை விட்டு விமானம் மூலம் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றார்.

ஆட்சி கவிழ்க்கப்பட்டதை சில இஸ்லாமிய அரசு ஆதரவாளர்கள் கொண்டாடிய அதே வேளையில் தலைநகர் டமாஸ்கஸில் குழப்பமும் பதற்றமும் நீடித்தது.

வங்கியில் புகுந்த கொள்ளையர்கள் பணப்பெட்டியுடன் ஓடியது முதல் ஜனாதிபதி அசாத்தின் வீட்டிற்குள் புகுந்து சிலர் சூறையாடுவது வரையிலான காணொளி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், இணையத்தில் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் இளைய சகோதரர் மகேர் அசாத்தின் பங்களாவிற்கு கீழ் கட்டப்பட்டு இருக்கும் ரகசிய பதுங்கு குழி காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது.

அதில், கதவு ஒன்று திறக்கப்படும் போது நீண்ட மற்றும் செங்குத்தான பல படிக்கட்டுகள் கொண்ட சுரங்கப்பாதை அமைப்பு இருப்பதை காணக்கூடியதாகவுள்ளதாக தெரிசவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுரங்கப்பாதையின் அடிப்பகுதியில் பல அறைகள் இணைக்கப்பட்டு உள்ளதுடன் அதில் ஒரு அறையில் பிளாஸ்டிக் பெட்டிகள், பிரீஃப்கேஸ்கள் மற்றும் இழுப்பறைகள் ஆகியவை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...