images 5 3
இலங்கைசெய்திகள்

அனர்த்தம் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் மீள ஆரம்பம்: 9929 பாடசாலைகள் டிசம்பர் 16 இல் திறப்பு!

Share

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு முக்கிய தீர்மானங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் உள்ள மொத்தப் பாடசாலைகளில் பெரும்பாலானவை எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி (திங்கட்கிழமை) மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

நாட்டில் உள்ள 10,076 அதற்கமைய, 9929 பாடசாலைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அனர்த்தங்களுக்கு அதிகளவில் முகங்கொடுத்துள்ள வலையங்களை உள்ளடக்கிய 147 பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய ஊவா மாகாணத்தில் 26 பாடசாலைகளும், வடமேல் மாகாணத்தில் 6 பாடசாலைகளும், மத்திய மாகாணத்தில் 115 பாடசாலைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படாது எனவும் அறிவித்தார்.

மேலும், டிசம்பர் 16ஆம் திகதி ஆரம்பமாகும் அனைத்துப் பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விச்சாரா ஊழியர்கள் டிசம்பர் 15ஆம் திகதி சேவைக்குச் சமூகமளிக்க வேண்டும் என்றும், அனர்த்த நிலைமையை எதிர்கொண்ட பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் கல்விசார், கல்விசாரா ஊழியர்களின் சீருடை தொடர்பில் நெகிழ்வுத்தன்மை பின்பற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

மேலும், 2025ஆம் ஆண்டின் மூன்றாம் தவணைக் காலத்தின் இரண்டாம் கட்டம் 2025.12.16ஆம் திகதி முதல் 2025.12.22ஆம் திகதி வரை, கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் 2025.12.29ஆம் திகதி முதல் 2025.12.31ஆம் திகதி வரை, முஸ்லிம் பாடசாலைகள் 2026.01.02ஆம் திகதி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடாத்தப்படாத ஏனைய பாடசாலைகள் 2026 ஜனவரி 12ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும், அது தொடர்பான மேலதிக அறிவிப்புகள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிடுவார் என்றும் அவர் தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை ஜனவரி 05ஆம் திகதி ஆரம்பிக்கப்படும், என்றும் சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி பெப்ரவரி மாதம் நடைபெறும் அறிவிக்கப்பட்டது.

எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படாத பாடசாலைகள் தொடர்பான விபரங்களை கீழே பார்வையிட முடியும்.

 

Share
தொடர்புடையது
25 6933ef7e16857 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தால் அழிவடைந்த வாகனங்களுக்கு டிசம்பர் 15 முதல் நடமாடும் சேவை: மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவிப்பு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக அழிவடைந்த வாகனங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாகவும்,...

high capacity bikes c5c03c9907
இலங்கைசெய்திகள்

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்: 2025 இல் 2,23,423 மோட்டார் சைக்கிள்கள் பதிவு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான எண்ணிக்கையில் மோட்டார் சைக்கிள்களே பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து...

images 6 3
இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சைகள் ஜனவரி 12 இல் மீண்டும் ஆரம்பம்: ஏனைய வகுப்புகளுக்கு மூன்றாம் தவணைப் பரீட்சை இரத்து!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது...

image 83a71cfba5
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கம்மடுவவில் நாய்களுக்கு உணவளித்த மாத்தளை நலன் விரும்பிகள்: மனதை உருக்கும் வளர்ப்பு நாய்களின் தேடல்!

‘டிட்வா’ புயலினால் ஏற்பட்ட மண் சரிவு அனர்த்தத்தில் பெரும் சேதத்திற்குள்ளான மாத்தளை மாவட்டத்தின் கம்மடுவ பிரதேசத்தில்,...