24 668aae2e0fddd 14
இலங்கைசெய்திகள்

தொடருந்து பாதையில் பேசிக்கொண்டிருந்த மாணவன் மற்றும் மாணவிக்கு நேர்ந்த கதி

Share

தொடருந்து பாதையில் பேசிக்கொண்டிருந்த மாணவன் மற்றும் மாணவிக்கு நேர்ந்த கதி

தொடருந்து பாதையில் பேசிக்கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவரும் மாணவர் ஒருவரும் தொடருந்தில் மோதுண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தானது, இன்று (07) இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவர்கள் இருவரும் 17 வயதுடையவர்கள் என்றும் அம்பலாங்கொடையில் உள்ள இரண்டு பிரதான பாடசாலைகளில் கல்வி கற்பவர்கள் என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, விபத்துக்குள்ளான மாணவன், மாணவி, அம்பலாங்கொடையில் ஹிரேவத்த மற்றும் தெல்துவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் மாணவி படுகாயத்துக்குள்ளாகியுள்ளதுடன், மாணவன் சிறிய கீறல் காயங்களோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தொடருந்து மோதியதில் பலத்த காயங்களுக்குள்ளான பாடசாலை மாணவி வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்ட போதும் சுயநினைவின்றி இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...