1 1 35
இலங்கைசெய்திகள்

மலிவு விலையில் பாடசாலை பயிற்சிப் புத்தகங்கள்: வெளியான நற்செய்தி

Share

மலிவு விலையில் பாடசாலை பயிற்சிப் புத்தகங்கள்: வெளியான நற்செய்தி

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களை மலிவு விலையில் சந்தைக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை நேற்று (25) பார்வையிடும் போது கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இதனை தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையின் மூலம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து கழிவு காகிதங்கள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்து பயிற்சி புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் மலிவு விலையில் சந்தைக்கு வெளியிட எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய கடதாசி கூட்டத்தபானமும் பல வருடங்களாக நலிவடைந்து வரும் விதம் தனது கண்காணிப்பு பயணத்தின் போது காணப்பட்டதாகவும், இதுவரையில் இருந்த குறைபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு புதிய பணியாளர்கள் ஆற்றலுடன் பணியாற்ற முயற்சிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
world 133
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வட்டுக்கோட்டையில் பயங்கரம்: இளைஞர் வெட்டிக்கொலை – இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் நேற்றிரவு (ஏப்ரல் 12, 2026) இடம்பெற்ற மோதலில்...

world 132
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான உடன்படிக்கை சாத்தியமானது: ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் நம்பிக்கை!

அமெரிக்கா தனது ஆதிக்க மனப்பான்மையைக் கைவிட்டு, ஈரான் தேசத்தின் உரிமைகளை மதித்து நடந்தால், இரு நாடுகளுக்கும்...

world 130
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி டெண்டர் முறைகேடு: சி.ஐ.டி-யில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் புகார்!

நிலக்கரி ஒப்பந்தப்புள்ளி (Tender) செயல்முறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை...

world 136
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யால தேசியப் பூங்காவில் சட்டவிரோத வேட்டை: 92 கிலோ இறைச்சியுடன் இருவர் கைது!

யால தேசியப் பூங்காவின் 02-ம் மண்டலப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வனவிலங்குகளை வேட்டையாடி, அவற்றின் இறைச்சியை...