12 38
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையருக்கு மகிழ்ச்சி தகவல் : பிள்ளைகளுக்கு கிடைக்கப்போகும் சன்மானம்

Share

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையருக்கு மகிழ்ச்சி தகவல் : பிள்ளைகளுக்கு கிடைக்கப்போகும் சன்மானம்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில்(foreign employment bureau) பதிவு செய்யப்பட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டு நாடு திரும்பிய தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை பொருட்களை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருவதாக சிறப்பு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தொழிலாளி வசிக்கும் பகுதியில் உள்ள இலங்கை(sri lanka) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகக் கிளை அலுவலகம், ஒரு மாணவருக்கு சுமார் ரூ. 10,000 மதிப்புள்ள பாடசாலை பொருட்களை வாங்குவதற்கான வவுச்சரை வழங்கும் என்று பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் விவரங்களை பிரதேச செயலகத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு அலுவலரிடமிருந்து பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பொருட்கள் இரண்டு வழிமுறைகள் மூலம் வழங்கப்படும், 1 முதல் 13 ஆம் வகுப்பு வரை அரசுப் பாடசாலைகளில் படிக்கும் பெற்றோர் தற்போது வெளிநாட்டில் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கும், 5 வருடங்களுக்கும் குறையாமல் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெற்றோர்களின் பிள்ளைகளுக்கும் ரூ. 10,000 மதிப்புள்ள பாடசாலை பொருட்களுக்கான வவுச்சர்கள் வழங்கப்படும் என்றும் பணியகம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – மலேசியா இடையே புதிய வான்வழி இணைப்பு: பாட்டிக் ஏர் தனது சேவையைத் தொடங்கியது!

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய மைல்கல்லாக, பாட்டிக் ஏர் மலேசியா...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொட்டகமுவ மும்முறை கொலை வழக்கு: 18 ஆண்டுகளின் பின் நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

கடந்த 2006-ஆம் ஆண்டு பாலப்பிட்டிய, தொட்டகமுவ பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யக்கல கட்சி அலுவலக விவகாரம்: ஜே.வி.பி-யிடம் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

யக்கல (Yakkala) பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை ஜனதா விமுக்தி பெரமுன...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா ராஜினாமா: புதிய பதில் தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி வந்த...