இலங்கைசெய்திகள்

மர்மமானமுறையில் உயிரிழந்த பாடசாலை மாணவன்!

tamilni 169 scaled
Share

அனுராதபுரத்தில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் 15 வயதான பாடசாலை மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நேற்று பிற்பகல் குறித்த மாணவர் தனது வீட்டில் உள்ள அறையில் உறங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படும் படுக்கையின் மேற்கூரையில் தூக்கில் தொங்கிய நிலையில் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

4 சகோதர சகோதரிகள் உள்ள குடும்பத்தில் இளையவரான மாணவனின் உடலில் பல இடங்களில் கீறல் காயங்கள் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் நடத்திய சோதனையில், இறந்த மாணவனின் படுக்கையின் மெத்தையின் கீழ், போதைப்பொருள் வகை, தீப்பெட்டி,சிம் அட்டைகள், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளுக்காக அவற்றை பொலிஸார் கொண்டு சென்றுள்ளனர்.

மரணம் தொடர்பான நீதவான் விசாரணையின் பின்னர், சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்யுமாறு பதில் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இதன் காரணமாக சடலத்தை தம்புள்ளை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...