33 1
இலங்கைசெய்திகள்

பாடசாலை மதிய உணவு திட்டம்: கல்வி அமைச்சு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

Share

பாடசாலை மதிய உணவு திட்டம்: கல்வி அமைச்சு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

பாடசாலை மதிய உணவு விநியோகஸ்தர்களுக்கு பணம் வழங்காத வலயக்கல்வி அலுவலகங்கள் தொடர்பான தகவல்களை கண்டறிய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

மதிய உணவு திட்டத்திற்கு தேவையான பணம் அந்தந்த மாகாணங்களுக்கு அனுப்பப்பட்ட போதிலும், வலயக் கல்வி அலுவலகங்கள் விநியோகஸ்தர்களுக்கு பணம் செலுத்தவில்லை என கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேல் மாகாணத்தில் இருந்து அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இதன் காரணமாக மதிய உணவு வழங்குவதை விநியோகஸ்தர்கள் நிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பணம் கிடைக்கும் வரை உணவு வழங்க முடியாது என விநியோகஸ்தர்கள் அதிபர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த காலங்களில் பணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், ஆனால் அரசாங்கத்தை அசௌகரியப்படுத்தும் நோக்கில் இம்முறை இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

வலயக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் அரசியல் தொடர்பினை கொண்டுள்ள சில அதிகாரிகள், பணம் இருந்தும் வழங்காது விநியோகஸ்தர்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....