tamilni 108 scaled
இலங்கைசெய்திகள்

மல்லாவி மத்தியகல்லூரியில் பாடசாலை தோட்ட கண்காட்சி

Share

மல்லாவி மத்தியகல்லூரியில் பாடசாலை தோட்ட கண்காட்சி

முல்லைத்தீவு – மல்லாவி மத்திய கல்லூரியில் தொழில் முனைப்புடன் கூடிய பாடசாலைத் தோட்ட கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது.

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ்ஸின் ஆலோசனையின் பேரில் மாகாண விவசாய திணைக்களத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தொழில் முயற்சியுடன் கூடிய இந்த கண்காட்சி நேற்று (10.10.2023) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது பாடசாலை மாணவர்களினால் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் பாடசாலையில் கண்காட்சியினை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்ததோடு அங்கு உள்ள வீட்டு தோட்டத்தினையும் பார்வையிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 67 பாடசாலைகளுக்கான தலா ரூபாய் 150000.00 காசோலைகளும், சான்றிதழ்களும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவினால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும் இன்றைய ஆரம்ப நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிறஞ்சன், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ. உமாமகேஸ்வரன் ,கல்வி வலய அதிகாரிகள் ,விவசாய திணைக்கள அதிகாரிகள் , சுகாதார துறை அதிகாரிகள்,பாடசாலைகளின் அதிபர்கள் ,ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Gallery

Gallery

Gallery

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...