3 39
இலங்கைசெய்திகள்

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு விவகாரம்: பிரதமரின் விசேட நடவடிக்கை

Share

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு விவகாரம்: பிரதமரின் விசேட நடவடிக்கை

புலமைப்பரிசில் கசிவு தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை தயாரிக்குமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

சுதந்திரமான நிபுணர்களின் பங்களிப்புடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் பணித்துள்ளார்.

புலமைப்பரிசில் வினாத்தாள்கள் வெளியிடப்பட்டமையினால் சிறுவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டுமென கல்வி அமைச்சின் அனைத்து திணைக்கள அதிகாரிகளுடன் இன்று (26) காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாடசாலை கல்வியின் மேம்பாடு தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருப்பதாகவும், புதிய அரசாங்கத்தின் கீழ் கல்விக்காக அதிக ஒதுக்கீடுகளை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அவநம்பிக்கையை களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...