5 12
இலங்கைசெய்திகள்

இலங்கையின் புதிய அரசாங்கம் தொடர்பில் திருப்தி வெளியிட்டுள்ள பிட்ச்

Share

இலங்கையின் புதிய அரசாங்கம் தொடர்பில் திருப்தி வெளியிட்டுள்ள பிட்ச்

இலங்கையில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கத்தின் செயற்பாடுகள், கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் அபாயங்களை குறைப்பதாக சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனமான பிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை இலங்கை அரசாங்கம் அங்கீகரித்தமை, 2024 செப்டம்பரில் சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்களுடன் ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் கடன் மறுசீரமைப்பை செயல்படுத்த இணங்கியமை என்பனவே, கடன் மறுசீரமைப்பு செயல்துறையின் அபாயங்களை குறைப்பதாக பிட்ச் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திநாநாயக்க தேர்ந்தெடுக்கப்பட்டமையானது, இலங்கை தொடர்பான கொள்கையில் நிச்சயமற்ற தன்மையை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையின் வெளிநாட்டு நாணயத்தை தாமதப்படுத்தக்கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய கூறுகளுக்கு சவால்களை ஏற்படுத்தும் அபாயத்தை அது, எழுப்பியிருந்தது.

எவ்வாறாயினும்,முன்னைய அரசாங்கம் மேற்கொண்ட கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைளுக்கு புதிய அரசாங்கத்தின் அணுகுமுறை அச்சுறுத்தலாக இருக்க வாய்ப்பில்லை என்று பிட்ச் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், இலங்கையின் மொத்த பொது அரச கடன் விகிதம் 2022 இல் சுமார் 116வீதத்தில் இருந்து 2028 ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 103வீதமாக படிப்படியாக குறையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...