Jhonson
இலங்கைசெய்திகள்

சதொச லொறி மோசடி: ஜோன்ஸ்டன் மற்றும் அவரது இரு மகன்களுக்கு ஜனவரி 30 வரை விளக்கமறியல் நீடிப்பு!

Share

கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சதொச (Sathosa) நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியைத் தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரு மகன்கள் உட்பட ஐந்து பேரின் விளக்கமறியல் இன்று (23) மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் இன்று வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது வழக்கை விசாரித்த மேலதிக நீதவான் பாத்திமா ஜிப்ரியா, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது மகன்களான ஜோஹான் பெர்னாண்டோ மற்றும் ஜெரோம் கென்னத் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐந்து பேரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அமைச்சராக இருந்தபோது, சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை அவருக்குச் சொந்தமான எதனோல் (Ethanol) நிறுவனத்தின் பணிகளுக்காக முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதன் மூலம் அரசாங்கத்திற்குச் சுமார் 2.5 இலட்சம் ரூபாய் நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (FCID) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஜோன்ஸ்டனின் மூத்த மகன் ஜோஹான் பெர்னாண்டோ கடந்த டிசம்பர் 30 அன்றும், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோர் கடந்த ஜனவரி 5 அன்றும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இன்றைய விசாரணையின் போது, சந்தேகநபர்கள் நேரடியாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படாமல், வாட்ஸ்அப் (WhatsApp) காணொளித் தொழில்நுட்பம் மூலம் சிறைச்சாலையில் இருந்தே நீதிமன்றத்துடன் இணைக்கப்பட்டனர். நிரந்தர நீதவான் விடுமுறையில் இருந்ததால், பிணை கோரிக்கை தொடர்பான கட்டளையை வழங்க எதிர்வரும் 30 ஆம் திகதியை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

 

 

Share
தொடர்புடையது
images 3 6
உலகம்செய்திகள்

பிரித்தானியா ஸ்தம்பிக்குமா? ஒரு வார கால முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ள ‘he Great British National Strike அமைப்பு!

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் புலம்பெயர்தல் விவகாரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாடு தழுவிய ரீதியில் ஒரு...

Dead 1200px 22 10 28 1000x600 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: மகள் மூட்டிய குப்பைத் தீ பரவி படுக்கையில் இருந்த தாய் பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம் – அரியாலையில் மகள் மூட்டிய குப்பைத் தீயானது எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் பரவியதில், படுக்கையில்...

archuna bail
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எம்.பி இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை அச்சுறுத்தல்: மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்று(29) மல்லாகம்...

virat kohli 183099488 sm
விளையாட்டுசெய்திகள்

விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீர் மாயம்: நள்ளிரவு ‘ஷாக்’ கொடுத்துவிட்டு மீண்டும் திரும்பிய ‘கிங்’!

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் (@virat.kohli) இன்று (30) அதிகாலை...