குருந்தூர் மலை - தமிழ் எம்.பி.க்களுக்கு சவால்
இலங்கைசெய்திகள்

குருந்தூர் மலை – தமிழ் எம்.பி.க்களுக்கு சவால்

Share

குருந்தூர் மலை – தமிழ் எம்.பி.க்களுக்கு சவால்

“நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்குத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முடிந்தால் நாடாளுமன்றில் என்னைக் கண்டிக்கட்டும். நான் அவர்களுக்கு அங்கு உரிய பதிலடி கொடுப்பேன்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் கடற்படையின் முன்னாள் தளபதியுமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சரத் வீரசேகர, குருந்தூர் மலையிலிருந்து தன்னை வெளியேற்றிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியைக் கடுமையாகச் சாடும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன், எம்.ஏ.சுமந்திரன், செ.கஜேந்திரன் ஆகியோர் கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.

இது தொடர்பில் சரத் வீரசேகர ஊடகங்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு – கிழக்கில் நடக்கும் உண்மைகளை தெற்கு மக்களின் பிரதிநிதி என்ற வகையில் அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு எனக்கு உண்டு.

வடக்கு – கிழக்கு தமிழ்ப் பிரதிநிதிகள் தெற்கிலுள்ள சிங்கள மக்களின் பிரதிநிதிகளை நோக்கி கை நீட்டும்போது நாம் கைக்கட்டி வேடிக்கை பார்க்க முடியாது.

வடக்கு – கிழக்கில் சட்டத்துக்கு அப்பால், நாட்டின் சட்டத்தை மீறித்தான் தமிழ் மக்களில் ஒரு பகுதியினரும் அவர்களது பிரதிநிதிகளும் செயற்படுகின்றனர். அவர்களின் செயற்பாடுகளுக்கு நீதித்துறையும் துணைபோவது கவலையளிக்கின்றது.

இந்தநிலையில்தான் குறிப்பிட்ட தமிழ் நீதிபதியின் செயற்பாடுகள் தொடர்பில் அதியுயர் சபையில் நான் உண்மைகளை அம்பலப்படுத்தினேன்.

நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்திச் சொல்லவேண்டிய இடத்தில் – சொல்லவேண்டிய நேரத்தில் எனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளேன்.

அதற்கு எதிராகத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கண்டனங்களை வெளியிடுவார்களாக இருந்தால் அதை அதியுயர் சபையில் வெளியிடட்டும்.

நானும் அதற்குப் பதிலடிகொடுப்பேன். அவர்கள் வெளியில் தெரிவிக்கும் கருத்துக்களைத் தூக்கி வீசுங்கள்” என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...