விடுதலை புலிகளின் தலைவர் குறித்து சரத் பொன்சேகா புகழாரம்

20 5

போர்க் களத்தில் இருந்து தப்பியோடாமல், இறுதி வேட்டு வரை போராடி உயிர் நீத்தமைக்காக விடுதலைப்புலிகளின் தலைவர் மீது எனக்குத் தனிமரியாதை உண்டு என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“விடுதலைப்புலிகளின் தலைவர் எமது எதிரணியாக இருந்தாலும், தப்பியோடாமல் இறுதி வரை சமரிட்டார்.

அதற்குரிய கௌரவத்தை அவருக்கு நான் வழங்கி வருகின்றேன். போர்க்களத்தில் இருந்து தப்பியோடாமல், இறுதி வேட்டு வரை போரிட்டார்.

எனவே, இந்த விடயத்துக்காக முன்னாள் இராணுவத் தளபதி என்ற அடிப்படையில் அவர் மீது எனக்கு எப்போதும் தனியான மரியாதை உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version