tamilni 419 scaled
இலங்கைசெய்திகள்

புத்தளத்தில் சனத் நிசாந்த ஓய்வெடுக்காமைக்கான காரணம்

Share

புத்தளத்தில் சனத் நிசாந்த ஓய்வெடுக்காமைக்கான காரணம்

மே 9 போராட்டத்தின் போது புத்தளத்தில் உள்ள சனத் நிசாந்தவின் உத்தியோகபூர்வ இல்லம் எரிக்கப்பட்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் புத்தளத்தில் ஓய்வெடுக்க வீடு இல்லாத நிலையில் நேற்றைய தினம் அவர் கொழும்புக்கு திரும்பிக் கொண்டிருந்த போதே விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சனத் நிசாந்தவின் மறைவு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், கட்சிக்கும், புத்தள மாவட்ட மக்களுக்கும் பாரிய இழப்பாகும். சனத் நிஷாந்த புத்தளம் மற்றும் சிலாபம் மாவட்ட மக்களுக்காக உழைத்தவர்.

புத்தளம் மற்றும் சிலாபத்தில் இடம்பெற்ற இரு நிகழ்வுகளில் கலந்து கொண்டு கொழும்பு செல்லும் வழியில் அவர் இந்த விபத்தை சந்தித்துள்ளார். மே 9ஆம் திகதி போராட்டத்தின் போது புத்தளத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லம் எரிக்கப்பட்டது.

எனவே புத்தளத்தில் ஓய்வெடுக்க வீடு இல்லாத நிலையில், கொழும்புக்கு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பொலிஸ் விசாரணைகளின் படி, இராஜாங்க அமைச்சரின் சாரதி மதுபோதையில் இருக்கவில்லை என தெரியவந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....