tamilni 500 scaled
இலங்கைசெய்திகள்

சனத் நிஷாந்தவின் விபத்தில் சிக்கிய மூன்றாவது வாகன சாரதியின் வாக்குமூலத்தில் சிக்கல்

Share

சனத் நிஷாந்தவின் விபத்தில் சிக்கிய மூன்றாவது வாகன சாரதியின் வாக்குமூலத்தில் சிக்கல்

கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்றாவது வாகனம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த விபத்துக்குள்ளான இரு வாகனங்களின் சாரதிகளும் மூன்றாவது வாகனத்தை குறிப்பிட்டுள்ளதால், நெடுஞ்சாலைப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிவேகம், மோசமான தெரு விளக்குகள், கவனக்குறைவு மற்றும் மூன்றாவது வாகனம் உள்ளிட்ட காரணங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

மேலும், இந்த விபத்தின் போது வாகனம் மணிக்கு 150 கிலோமீற்றர் வேகத்தில் சென்றதாகவும், அமைச்சர் விரைவில் வீட்டுக்குச் செல்ல விரும்பியதாகவும் வாகன சாரதி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதன்போது இடதுபுறம் வந்த மற்றைய காரை முந்திச்செல்ல முற்பட்ட போது, ​​தனக்கு முன்னால் பயணித்த பாரவுர்தியை கண்டதாகவும், ஆனால் பயம் காரணமாக வாகனத்தை வீதியின் வலது பக்கம் கொண்டு வர முடியாமல் போனமையினால் இந்த விபத்து நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வாகன சாரதியின் வாக்குமூலங்களில் சிக்கல்கள் உள்ளமையும் தெரியவந்துள்ளது.
குறித்த சாரதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட காணொளி தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சாரதியின் கைத்தொலைபேசி இரகசிய பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,நெடுஞ்சாலையில் உள்ள பாதுகாப்பு கேமரா அமைப்பும் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

Share
தொடர்புடையது
24 6719ef7b673a7
அரசியல்செய்திகள்

டயானா கமகே கடவுச்சீட்டு விசா வழக்கு: மேலதிக சாட்சியங்களுக்காக பிப். 16க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத்...

Waqf Board Donates Rs 10 Million 1170x658 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் சேதமடைந்த மதத் தலங்களைப் புனரமைக்க: வக்ஃப் சபை 10 மில்லியன் நிதி நன்கொடை!

கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக, வக்ஃப் சபையினால்...

Untitled
அரசியல்இலங்கைசெய்திகள்

கிராம உத்தியோகத்தர்களுக்கு எதிரான பொதுவான குற்றச்சாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் – இம்ரான் மகரூப் கோரிக்கை!

நாட்டிலுள்ள ஒட்டுமொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும்,...

24 66c584aba0b91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வெல்லவாய – தனமல்வில விபத்து: ஒருவர் பலி, 4 பேர் காயம்!

வெல்லவாய – தனமல்வில வீதியில் உள்ள தெல்லுல்லப் பகுதியில் இன்று (டிசம்பர் 15) ஏற்பட்ட கோர...