tamilnaadi 99 scaled
இலங்கைசெய்திகள்

சனத் நிஷாந்தவின் மரணத்தில் கொலையென சந்தேகம்

Share

சனத் நிஷாந்தவின் மரணத்தில் கொலையென சந்தேகம்

கட்டுநாயக்க நெடுஞ்சாலை விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அவர் இயற்கையாக நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தாரா அல்லது திட்டமிட்டு கொல்லப்பட்டாரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த சனத் நிஷாந்த தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி கட்சியை சேர்ந்தவர்கள் மிகவும் மோசமான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதனால்தான் இந்த சந்தேகம் அதிகமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சனத் நிஷாந்தவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவரது இல்லத்திற்கு சென்ற போது ஊடகங்களின் முன்னிலையில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சனத் நிஷாந்தவின் மரணத்தை தென்னிலங்கை மக்கள் வரவேற்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சில இடங்களில் பால் சோறு வழங்கி கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...