tamilnaadi 99 scaled
இலங்கைசெய்திகள்

சனத் நிஷாந்தவின் மரணத்தில் கொலையென சந்தேகம்

Share

சனத் நிஷாந்தவின் மரணத்தில் கொலையென சந்தேகம்

கட்டுநாயக்க நெடுஞ்சாலை விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அவர் இயற்கையாக நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தாரா அல்லது திட்டமிட்டு கொல்லப்பட்டாரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த சனத் நிஷாந்த தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி கட்சியை சேர்ந்தவர்கள் மிகவும் மோசமான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதனால்தான் இந்த சந்தேகம் அதிகமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சனத் நிஷாந்தவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவரது இல்லத்திற்கு சென்ற போது ஊடகங்களின் முன்னிலையில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சனத் நிஷாந்தவின் மரணத்தை தென்னிலங்கை மக்கள் வரவேற்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சில இடங்களில் பால் சோறு வழங்கி கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...