20 16
இலங்கைசெய்திகள்

அனுமதி வழங்குவதற்கு முன்னரே விநியோகிக்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள்: நாடாளுமன்றில் தகவல்

Share

அனுமதி வழங்குவதற்கு முன்னரே விநியோகிக்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள்: நாடாளுமன்றில் தகவல்

உரிமம் வழங்குவதற்கான புதிய நடைமுறைக்கு நாடாளுமன்றில் அனுமதி வழங்கப்படுவதற்கு முன்னரே சுமார் 90 மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக வழிகள் மற்றும் வழிமுறைகள் குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் நேற்றைய(21) அமர்வின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இந்த ஆண்டின் ஆரம்பத்தில் உரிமம் வழங்குவதற்கான நடைமுறையை, வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, நான்கு மாதங்களாகியும் அதற்கு நாடாளுமன்ற அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

இன்று வரை அது நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலைமை இருந்தபோதிலும் சுமார் 90 மதுபான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த 90 மதுபான அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்வதற்கு எவ்வித சட்ட ஏற்பாடுகளும் இல்லை.

இதற்கிடையில், மதுபான உற்பத்தியாளர்களிடம் இருந்து வசூலிக்காத வரியை வசூலிக்க, மதுவரி திணைக்களத்திற்கு நிதியமைச்சகம் ஆலோசனை வழங்கவில்லை என, வழிகள் மற்றும் வழிமுறைகள் குழுவின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இதன்படி, டபிள்யூ.எம்.மென்டிஸ் மற்றும் நிறுவனம் 3,447, 109, 832.59 ரூபாய்களையும், வயம்ப டிஸ்டில்லரீஸ் /ரோயல் சிலோன் டிஸ்டில்லரீஸ் ரூ. 500,723, 437 ரூபாய்களையும் மெக்கல்லம் ப்ரூவரிஸ் 619, 964,802 ருபாய்களையும், களுத்துறை கூட்டுறவு டிஸ்டில்லரீஸ் 17, 878, 752 ருபாய்களையும் செலுத்த தவறியுள்ளன.

இதில் வயம்ப டிஸ்டில்லரீஸ் நிறுவனம் மட்டும், தவறிய வரிகளை செலுத்துவதை தடுக்கும் உத்தரவை நீதிமன்றத்திடம் பெற்றுள்ளது.

எவ்வாறாயினும், மதுவரி திணைக்களம் இந்த வருடத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட வருமானத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது” என ரணவக்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...