24 6603ee2c3ee8e
இலங்கைசெய்திகள்

சம்பந்தனின் ஆசை இதுவே!…கனடா மக்களுக்கு அநுர கூறிய செய்தி

Share

சம்பந்தனின் ஆசை இதுவே!…கனடா மக்களுக்கு அநுர கூறிய செய்தி

இந்த நாட்டின் இரண்டாம் தரப் பிரஜையாக இருக்க விரும்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தம்மிடம் கூறியதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

cவாழ் இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

“சம்பந்தனுடைய சில அரசியல் நிலைப்பாடுகளில் எனக்கு உடன்பாடில்லை. ஒருநாள் சம்பந்தன் என் கைககளைப் பிடித்துக் கொண்டு “அநுர, நான் இலங்கையன் என்பதனை இந்த உலகிற்கு சத்தமிட்டுக்கூற ஆசை படுகின்றேன்.

ஆனால் இந்த நாட்டின் இரண்டாம் தரப் பிரஜை என கூறிக்கொள்ள நான் விரும்பவில்லை.” என கூறினார். அது நியாயமானது அல்லவா.

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே என்னிடம் “என்னால் இந்த நாட்டில் செல்லக்கூடிய அதிகபட்ச தூரத்தை நான் அடைந்து விட்டேன். நான் அமைச்சுப் பதவியின் மூலம் அதனை அடைந்து விட்டேன்.” என்றார்.

ஜெயராஜின் இனத்துவ அடிப்படையில் அவரினால் இந்த நாட்டில் அமைச்சராக மட்டுமே பதவி வகிக்க முடியும் என உணர்ந்தால் அது நியாயமானதல்ல.

ஜனாதிபதியாக முடியுமா பிரதமராக முடியுமா என்பது வேறு கதை. எனினும், ஒருவர் தனது இனம், மதம், கலாச்சாரத்தின் அடிப்படையில் ஓர் பதவியை அடையவே முடியாது என கருதும் சூழ்நிலையானது ஆரோக்கியமானதல்ல.

நாம் என்ன கூறினாலும், உனக்கு என்ன பிரச்சினை என கேள்வி எழுப்பினாலும், ஒருவர் தான் இரண்டாம் தரப் பிரஜை என உணர்ந்தால் இந்த நாட்டில் ஏதோ ஓர் பிரச்சினை இருக்கின்றது என்பது நிதர்சனமானது.

அரசியலில், அரசியல் சந்தர்ப்பங்களில் நியாயமான முறையில் இணைந்து கொள்வதற்கான உரிமையை உறுதி செய்ய வேண்டும்.” என அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
1036524 cigar
செய்திகள்இலங்கை

அதிக ஆண்கள் சிகரெட் புகைக்கும் நாடுகள்: 70.5% உடன் இந்தோனேசியா முதலிடம்; இலங்கை 8வது இடத்தில்!

அதிக ஆண்கள் சிகரெட் புகைக்கும் தரவரிசைப் பட்டியலின் முதலிடத்தில் இந்தோனேசியா உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இது...

MediaFile 2
செய்திகள்இந்தியா

நிகழ்நிலை சூதாட்ட செயலி வழக்கு: சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் ரூ. 11 கோடி சொத்துகள் முடக்கம்!

ஒரு குறிப்பிட்ட நிகழ்நிலை சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்...

25 690cc39f76f96
செய்திகள்இந்தியா

மாத்தறை வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளர் நவம்பர் 28 அன்று தெரிவு: வர்த்தமானி வெளியீடு!

மாத்தறை, வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளர் (தலைவர்) எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி தெரிவு...

24 6718a970f1422
செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு தாழங்குடாவில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதல்: சஹ்ரான் குழுவின் வெடிகுண்டு சோதனை நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் பரபரப்பு!

மட்டக்களப்பு, தாழங்குடா பகுதியில் சஹ்ரான் குழுவினரால் வெடிகுண்டுச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இடத்தை அண்மித்த ஒரு...