இலங்கைசெய்திகள்

விரும்பினால் பேசுங்கள்! சம்பந்தனுக்கு ரணில் பதிலடி

tamilni 313 scaled
Share

விரும்பினால் பேசுங்கள்! சம்பந்தனுக்கு ரணில் பதிலடி

“எங்களைத் தொடர்ந்தும் ஏமாற்றாதீர்கள்” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பி. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இரா.சம்பந்தன் கடும் தொனியில் கூறிய இந்த வார்த்தைகளால் சினமுற்ற ஜனாதிபதி ரணில் , ”பேச விரும்பினால் மட்டும் என்னுடன் பேசுங்கள். இல்லையேல் நீங்கள் எழுந்து செல்லலாம்”, என்று தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (18.07.2023) மாலை நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின் ஆரம்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரப் பகிர்வு குறித்து பேசவில்லை என கூறப்படுகின்றது.

மாறாகத் தாம் தயார்ப்படுத்திக் கொண்டுவந்த மனித உரிமைகள் சார் விடயம், காணாமல்போனோர் பணிமனை, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாகவே விளக்கமளித்துள்ளார்.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் பேசப்படாத நிலையில், சினமுற்ற இரா. சம்பந்தன் எம்.பி., “எங்களைத் தொடர்ந்தும் ஏமாற்றாதீர்கள். அதிகாரப் பகிர்வு குறித்து முதலில் எங்களுடன் பேசுங்கள்…” என்று தெரிவித்துள்ளார்.

இதன் பின்னரே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் குறித்துப் பேசியுள்ளார்.

சம்பந்தன் கடும் தொனியில் கூறிய இந்த வார்த்தைகளால் சினமுற்ற ஜனாதிபதி ரணில், ”பேச விரும்பினால் மட்டும் என்னுடன் பேசுங்கள். இல்லையேல் நீங்கள் எழுந்து செல்லலாம்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து, ‘என்னால் தரக்கூடியவற்றையே தர முடியும். 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதானால் நாடாளுமன்றில் 3இல் 2 பெரும்பான்மை அவசியம். அதனை செய்ய எம்மால் முடியாது’, என்றும் அவர் கோபமாகவே பதிலளித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...