images 3
அரசியல்இலங்கைசெய்திகள்

எதிர்க்கட்சி தலைவரின் இல்லத்தில் எட்டு வருடங்கள் தங்கியிருந்த சம்பந்தன்

Share

எதிர்க்கட்சி தலைவரின் இல்லத்தில் எட்டு வருடங்கள் தங்கியிருந்த சம்பந்தன்

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன்(Sampanthan) கொழும்பு 7, மஹகமசேகர மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சுமார் 8 வருடங்களாக தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் காணி மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சராக இருந்த கயந்த கருணாதிலக்க (Gayantha Karunathilaka) பெப்ரவரி 26, 2019 அன்று சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்ததையடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் வரை இந்த வீடு அவருக்கு பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியிலிருந்து அண்மையில் விலகியிருந்தார். இப்போது அவர் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே.

கடந்த ஓகஸ்ட் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் பின்னர், ஆர். சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றபோது இந்த உத்தியோகபூர்வ இல்லம் அவருக்கு வழங்கப்பட்டது.

2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டதன் மூலம் உருவாக்கப்பட்ட 52 நாள் ஆட்சி மாற்றத்தின் பின்னர் மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற போதும் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்தார்.

இதேவேளை சம்பந்தன் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவியிருந்தே விலகியிருந்தார் என்பதுவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைப்பதவியில் தொடர்ந்தும் அவரே உள்ளார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...