24 6644089895083
இலங்கைசெய்திகள்

தமிழர்களை ஏறி மிதித்தால் கோட்டாபயவின் நிலைதான் ரணிலுக்கும் ஏற்படும்: சம்பந்தன்

Share

தமிழர்களை ஏறி மிதித்தால் கோட்டாபயவின் நிலைதான் ரணிலுக்கும் ஏற்படும்: சம்பந்தன்

நினைவேந்தல் நிகழ்வுக்குத் தடை ஏற்படுத்தித் தமிழர்களை ஏறி மிதித்தால் கோட்டாபயவின் நிலைதான் ரணிலுக்கும் ஏற்படும் என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தள்ளார்.

இறுதிப் போரில் உயிர்நீத்த தமது உறவுகளை நினைவேந்தத் தமிழ் மக்களுக்கு முழுமையான உரிமை உண்டு. அதனால்தான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வைத் தமிழ் மக்கள் பகிரங்கமாக நடத்தி வருகின்றார்கள் எனவும் கூறியுள்ளார்.

திருகோணமலை – சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சியைப் பரிமாறிய மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் இரவு வேளையில் பொலிஸாரால் அடாத்தான முறையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

அதேபோன்று அம்பாறை மாவட்டம், கல்முனையிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வுக்குப் பொலிஸாரால் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸாரின் இந்த அராஜகச் செயல்களுக்குக் கண்டனம் தெரிவிக்கும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மே மாதம் உணர்வுபூர்வமானது.

அவர்கள், இறுதிப் போரில் உயிர்நீத்த தமது உறவுகளை நினைவேந்துவதற்கான புனிதமான மாதமே இந்த மே மாதமாகும். அவர்கள் போரில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவேந்துவதற்கு முழுமையான உரித்துடையவர்கள். அவர்களின் அந்த அடிப்படை உரித்தை யாரும் நிராகரிக்கவே முடியாது.

அவ்வாறு நிராகரிப்பதற்கு இடமளிக்க முடியாது. அவ்வாறு இடையூறுகளை ஏற்படுத்துவதும், நிராகரிப்பதும் அடிப்படைச் சட்டங்களை மீறுவதாகும்.

அதேநேரம், திருகோணமலை, சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இரவு வேளையில் அவர்கள் மீது மிலேச்சத்தனமான முறையில் தாக்குதல் நடத்திய பொலிஸார், அவர்களைக் கைது செய்துள்ளார்கள்.

அம்பாறை, கல்முனையிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வு தடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் இந்த அடாவடிகள் அடிப்படை மனித உரிமை மீறல்களாகும். இந்தவிதமான செயற்பாடுகளை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இது தொடர்பாகக் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தொலைபேசியில் பேசியுள்ளேன். கிழக்கில் பொலிஸார் இந்த அராஜகங்களைப் புரிய யார் அதிகாரம் தந்தது என்று அவரிடம் வினவியுள்ளேன்.

எனது வன்மையான கண்டனங்களை அவரிடம் தெரிவித்துள்ளேன். கைது செய்யப்பட்டவர்கள் தாமதமின்றி விடுவிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பகிரங்கமாகக் கோரிக்கை விடுகின்றேன்.” என்றார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...