18 24
இலங்கைசெய்திகள்

ஆனையிறவு உப்பள ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து முக்கிய சந்திப்பு

Share

கிளிநொச்சி (Kilinochchi) – ஆனையிறவு உப்பள ஊழியர்களுக்கும் தேசிய உப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளருக்குமான சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

பல்கோரிக்கைகளை முன்வைத்து உப்பள ஊழியர்களின் ஒருதரப்பினரால் போராட்டம் ஒன்று கடந்த 15 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த உப்பளத்தில் கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் தற்காலிக பருவகால ஊழியர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

மேலும், இங்கு உற்பத்தியாகும் உப்பினை ஆனையிறவில் பொதி செய்து விநியோகிக்குமாறும் தற்போதைய முகாமையாளரை இடமாற்ற கோரியும் கடந்த 14ஆம் திகதி ஆனையிறவுஉப்பளத்தின் முன்பாக போராட்டம் முன்னெடுத்து இருந்தனர்.

இந்த நிலையில் அரச சொத்துக்குச் சேதம் ஏற்படுத்தல் மற்றும் ஆனையிறவில் உள்ள உப்பை வெளியிடத்திற்கு கொண்டு செல்வதற்கு தடை விதிக்க கூடாது என கிளிநொச்சி பொலிஸார் கிளிநொச்சி நீதிவான் நீதமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நகர்த்தல் பத்திரத்தினூடாக வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் இன்றைய இச்சந்திப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...