15 5
இலங்கைசெய்திகள்

மற்றுமொரு அத்தியாவசிய பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Share

மற்றுமொரு அத்தியாவசிய பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

அண்மைய நாட்களாக தொடர்ந்து வந்த காலநிலை மாற்றங்களினால் இலங்கையில் உப்புத் தொழிலுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்து வந்த கடும் மழை மற்றும் வெள்ள அச்சுறுத்தல் காரணமாக புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருக்குணமலையில் உள்ள குச்சவெளி உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கி உப்பு உருகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்த சில நாட்களில் நாட்டில் உப்புக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, உப்பு நுகர்வு மிக அதிகமாக இருக்கும் நாடு இலங்கை ஆகும், கணக்கெடுப்பு அறிக்கைகளின்படி, இலங்கையில் தனிநபர் உப்பு நுகர்வு 11.3 கிராம் ஆகும்.

இவ்வாறனதொரு பின்னணியில், ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஐந்து கிராம் உப்பு தேவை என்பது உலக சுகாதார அமைப்பின் பரிந்துரை. ஆனால் எமது நாட்டில் உப்பின் பயன்பாடு அனுமதிக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் வருடாந்த உப்பு நுகர்வு 125,000 – 150,000 மெட்ரிக் தொன்களுக்கு இடையில் உள்ளது.

இந்த நிலையில், எதிர்காலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் இந்தியாவிலிருந்து சுமார் இருபதாயிரம் மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கு உப்பு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...