15 5
இலங்கைசெய்திகள்

மற்றுமொரு அத்தியாவசிய பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Share

மற்றுமொரு அத்தியாவசிய பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

அண்மைய நாட்களாக தொடர்ந்து வந்த காலநிலை மாற்றங்களினால் இலங்கையில் உப்புத் தொழிலுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்து வந்த கடும் மழை மற்றும் வெள்ள அச்சுறுத்தல் காரணமாக புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருக்குணமலையில் உள்ள குச்சவெளி உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கி உப்பு உருகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்த சில நாட்களில் நாட்டில் உப்புக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, உப்பு நுகர்வு மிக அதிகமாக இருக்கும் நாடு இலங்கை ஆகும், கணக்கெடுப்பு அறிக்கைகளின்படி, இலங்கையில் தனிநபர் உப்பு நுகர்வு 11.3 கிராம் ஆகும்.

இவ்வாறனதொரு பின்னணியில், ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஐந்து கிராம் உப்பு தேவை என்பது உலக சுகாதார அமைப்பின் பரிந்துரை. ஆனால் எமது நாட்டில் உப்பின் பயன்பாடு அனுமதிக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் வருடாந்த உப்பு நுகர்வு 125,000 – 150,000 மெட்ரிக் தொன்களுக்கு இடையில் உள்ளது.

இந்த நிலையில், எதிர்காலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் இந்தியாவிலிருந்து சுமார் இருபதாயிரம் மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கு உப்பு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...