15 4
இலங்கைசெய்திகள்

சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பு குறித்து எழுந்துள்ள கடும் விமர்சனம்

Share

சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பு குறித்து எழுந்துள்ள கடும் விமர்சனம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில், அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

தேர்தல் ஆணையகத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை என்ற பெப்ரல் அமைப்பு, இந்த விடயத்தை ஆராயுமாறு வலியுறுத்தியுள்ளது.

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுவதில் தமக்கு ஆட்சேபனை இல்லை. எனினும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, அதுவும் அஞ்சல் மூல வாக்களிப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறித்தே, தாம் அதிருப்தி அடைவதாக பெப்ரல் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, சில மாதங்களுக்கு முன்னர், அரசு ஊழியர்களுக்கு 10ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வைக் கோரியபோது, அரசாங்கம் எப்படி முழுக் கண்மூடித்தனமாக இருந்தது என்பதை பெப்ரல் நினைவுகூர்ந்துள்ளது.

அத்துடன், அரசாங்கத்தின் தற்போதைய சம்பள உயர்வு அறிவிப்பு, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும்போது மாதத்திற்கு 20 பில்லியன் ரூபாய்கள் மேலதிக செலவு ஏற்படும்.

எனினும், நாட்டின் மோசமான பொருளாதார நிலைமைக்கு மத்தியில் இந்த முடிவின் சாத்தியக்கூறு குறித்து பெப்ரல் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...