6 33
இலங்கை

அநுர குமாரவுக்கு அளிக்கப்பட்டுள்ள கால அவகாசம்

Share

அநுர குமாரவுக்கு அளிக்கப்பட்டுள்ள கால அவகாசம்

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் (anura kumara dissanayake)அரசாங்கத்தை முன்னெடுக்க முடியாவிட்டால் ஆட்சியை பொறுப்பேற்றுக்கொள்ளத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார(nalin bandara) இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் மேடைகளில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை(ranil wickremesinghe) சிறையில் அடைத்தல், கள்வர்களை பிடித்தல், அரச ஊழியர்களின் சம்பளங்களை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி தொடர்பில் ஆரோக்கியமான எண்ணத்தைக் தாம் கொண்டிருப்பதாகவும் அவர் தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

ஏதேனும் சந்தர்ப்பத்தில் அவர்களினால் ஆட்சியை முன்னெடுக்க முடியாவிட்டால் அந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தைப் பொறுப்பேற்றுக்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

24 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு – மெல்பேர்ன் விமான சேவைகள் அதிகரிப்பு: ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் அறிவிப்பு!

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு மற்றும் அங்கு வசிக்கும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின்...

23 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றம்: புதிய விலைப் பட்டியல் அறிவிப்பு!

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்குத்...

22 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதிக்குத் தட்டுப்பாடு: கொடையாளர்களின் உதவி கோரல்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் தற்போது அனைத்து வகைக் குருதிக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுவதாக...