14 24
இலங்கைசெய்திகள்

13ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சஜித் உறுதி

Share

13ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சஜித் உறுதி

13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உறுதியாக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளர் சோமசுந்தரம் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிகுடியில் நேற்று (29.08.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு கிழக்கு மக்களும் இந்த அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என தீர்மானித்துள்ளார்கள். தமிழ் மக்களின் பிரச்சனைகள் 70 வருடங்களாக தீர்க்கப்படாமல் உள்ளன.

தமிழ் மக்களின் அதிகாரப் பரவலாக்கலை எந்த அரசாங்கமும் இதயசுத்தியுடன் நடைமுறைப்படுத்தவில்லை. இந்நிலையில் எமது கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தமிழரசுக் கட்சி, போன்ற கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அதில் 13ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பேசப்பட்டிருந்தன. எங்களுடைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் எமது கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நூறுவீதம் உறுதியாக உள்ளார்.

அதிலுள்ள அனைத்து விடயங்களும் நடைமுறைப்படுத்தப்படும். குறிப்பாக அதில் சர்சைக்குரிய விடையமாக அமைந்துள்ள பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் ஆகிய அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட்டு அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...