13 26
இலங்கைசெய்திகள்

ரணில் – சஜித்தை இணைக்கும் பேச்சுக்கு குழுக்கள் நியமனம்

Share

ரணில் – சஜித்தை இணைக்கும் பேச்சுக்கு குழுக்கள் நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒரு கூட்டணியின் கீழ் ஒன்றிணைப்பதற்குரிய பேச்சுகளை முன்னெடுப்பதற்காக இரு தரப்புகளில் இருந்தும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவில் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கபீர் ஹாசீம், ஹர்சன ராஜகருண ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள, பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன உள்ளிட்டவர்கள் பேச்சுகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இரு தரப்புகளுக்கும் இடையில் உத்தியோகபூர்வமற்ற விதத்தில் ஏற்கனவே பேச்சுகள் ஆரம்பமாகி இருந்தாலும், அடுத்து வரும் நாட்களில் அதிகாரபூர்வமாக பேச்சுகள் ஆரம்பமாகவுள்ளன.

Share
தொடர்புடையது
marriage5872 1667871504
இந்தியாசெய்திகள்

40 நாட்களில் 150 திருமணங்கள் ரத்து; சமூக ஊடகங்களே பிரதான காரணம்!

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் கடந்த 40 நாட்களில் மட்டும் சுமார் 150 திருமணங்கள்...

New Project 3 20
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க ரணில் தயார்; தலதா அத்துகோரள

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமைகள் மற்றும் இடர் காலங்களில் அரசாங்கத்திற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க...

Screenshot 2025 12 18 075235
அரசியல்இலங்கைசெய்திகள்

அரச அறிவிப்புகள் சிங்களத்தில் மாத்திரம்: தமிழ் பேசும் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்! – ஜனாதிபதிக்கு சம உரிமை இயக்கம் கடிதம்

அரசாங்கத்தின் அனர்த்த கால உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் அரச அறிக்கைகள் தமிழ் மொழியில் வெளியிடப்படாமை குறித்து...