1 8
இலங்கைசெய்திகள்

அம்பலமாகிய ரணில் – அநுர ஒப்பந்தம்: பகிரங்கப்படுத்திய சஜித்

Share

அம்பலமாகிய ரணில் – அநுர ஒப்பந்தம்: பகிரங்கப்படுத்திய சஜித்

ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க மற்றும் அநுர குமார திஸாநாயக்கவிற்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று இருப்பது இன்று அம்பலமாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடையில் இன்று (05.09.2024) இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்,
“ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்கவிற்கு அளிக்கும் வாக்கு திருடர்களின் அணியையே காப்பாற்றும். ரணில் தரப்புடன் அவர்களுக்கு ஒப்பந்தம் இருப்பது நிரூபணமாகியுள்ளது.

அவர்கள் ஏன் எங்களுக்கு இவ்வளவு தூரம் அஞ்சுகின்றனர்? அவர்களுக்கு நாம் இந்த நாட்டை முன்னேற்றி விடுவோம் என்ற பயம் உள்ளது.

நாம் இந்த நாட்டில் வீடுகளைக் கட்டுவோம் என்று அவர்களுக்கு பயம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்போம் என்று அவர்களுக்கு பயம்.

இந்த நாட்டில் உள்ள 10,096 பாடசாலைகளையும் நாம் ஸ்மார்ட் பாடசாலைகளாக மாற்றுவோம் என்ற பயமும் அவர்களுக்கு உள்ளது. இந்த நாட்டின் சுகாதார சேவையை கட்டியெழுப்புவோம் எனவும் அவர்கள் அஞ்சுகின்றனர்.

இதனால் தான் ரணில் – அநுர ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...