tamilni 352 scaled
இலங்கைசெய்திகள்

சஜித்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Share

சஜித்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

நாடாளுமன்றில் எதிர்க்கட்சி தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அவரது கையில் இருந்த ஆவணத்தை பிடுங்கிச் சென்ற குற்றத்திற்காக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு இரண்டு வாரங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தாம் வருந்துவதாக அவர் தெரிவித்துள்ளார். சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்ததன் மூலம் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற்றிருக்க கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோரின் நடவடிக்கைகளும் ஏற்புடையது அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த இருவரும் நாடாளுமன்றின் நிலையியற் கட்டளைகளையும், நாடாளுமன்றின் சிறப்பு உரிமைகளையும் மீறி செயற்பட்டு உள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே அந்த இருவருக்கு எதிராகவும் தண்டனை வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...