3 31
இலங்கைசெய்திகள்

ஐஎம்எப் உடன்படிக்கை தொடர்பாக சஜித்தின் உறுதி

Share

ஐஎம்எப் உடன்படிக்கை தொடர்பாக சஜித்தின் உறுதி

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) புதிய உடன்படிக்கையை செய்துக் கொள்ளவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) உறுதியளித்துள்ளார்.

கண்டி, மாவனல்லையில் இன்று (19.08.2024) நடைபெற்ற அரசியல் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச, இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அந்தவகையில் ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் புதிய உடன்படிக்கை மனிதாபிமானத்தை மையமாகக் கொண்டதாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய, சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை ஒரு புதிய அரசாங்கம் திருத்த முடியாது என்று அரசாங்கம் கூறுகிறது.

எனினும், மனிதாபிமான அடிப்படையிலான புதிய ஒப்பந்தத்தின் மூலம் அதனை திருத்தம் செய்யவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் 2033ஆம் ஆண்டிலிருந்து கடனைத் திருப்பிச் செலுத்த முன்மொழிந்ததாகவும், ஆனால் தற்போதைய அரசாங்கம் 2028ஆம் ஆண்டிலிருந்து கடனை திருப்பிச் செலுத்த உடன்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதியும் அரசாங்கமும் இத்தகைய எதிர் பிரேரணையை முன்வைத்தது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை எதிர்க்கட்சிகள் பல தடவைகள் சந்தித்துள்ளதாக தெரிவித்த சஜித் பிரேமதாச, தற்போதைய உடன்படிக்கையானது குடிமக்களின் ஆசீர்வாதமில்லாத அரசாங்கமும் ஜனாதிபதியும் இணைந்து செய்துள்ள உடன்படிக்கை என்று, தாம் சர்வதேச நாணய நிதியத்திற்கு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...