15 23
இலங்கைசெய்திகள்

அநுரவின் வெற்றிக்கு பின்னர் சஜித் வெளியிட்ட கருத்து

Share

அநுரவின் வெற்றிக்கு பின்னர் சஜித் வெளியிட்ட கருத்து

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள அநுரகுமார திசாநாயக்க தரப்புக்கு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த ஜனாபதிபதித் தேர்தலின் பெறுபேறுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனுரகுமார தரப்புக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இலங்கையின் மிகவும் நெருக்கடியான காலகட்டமொன்றில் இந்த நாட்டை சுபீட்சத்தை நோக்கி வழிநடத்துவதற்கான ஆற்றல் அனுரகுமார தரப்புக்கு கிடைக்க வேண்டும்.

அதே நேரம் வெற்றி பெற்றுள்ளவர்கள் மட்டுமே நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதோ அதற்கான பொறுப்பு மற்றவர்களுக்கு இல்லை என்பதோ இல்லை.

அந்த வகையில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான விடயங்களில் பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில் எமது கட்சியும் புதிய ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பினை வழங்கும்” என்றும் அறிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...