2 25
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திலிருந்து வெளியேற தயாராகும் மகிந்த அணி

Share

அரசாங்கத்திலிருந்து வெளியேற தயாராகும் மகிந்த அணி

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து அரசாங்கத்துடன் இணைய இணக்கம் தெரிவித்துள்ள 25 நாடாளுமன்ற உறுப்பினர்களை உடனடியாக அழைத்து வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வரை ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைய மாட்டார்கள் என ஜனாதிபதிக்கு விசுவாசமான கட்சிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்திற்குள் கொண்டு வருவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தடையாக இருந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் இருந்து வெளியேறத் தயார் என அந்தக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் இருந்து விலகுவதற்கும் வெளியில் இருந்து ஆதரவு தருவதற்கும் தயார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...