tamilni 430 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு சிகப்பு எச்சரிக்கை

Share

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு சிகப்பு எச்சரிக்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மறைகரமொன்று வழிநடத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி நீக்கப்பட்டமை பாரதூரமான ஜனநாயக மீறல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு ஜனாதிபதி விடுத்துள்ள சிகப்பு எச்சரிக்கையே இது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதியின் தீர்மானங்களுக்கு Yes Sir Yes Sir என ஆமோதிக்கத் தவறினால் இவ்வாறு பதவி இழக்க நேரிடும் என்பதே இதன் பொருளாகும்.

இந்த நாட்டில் யார் அமைச்சராக இருக்க வேண்டும் யார் அமைச்சராக இருக்கக் கூடாது என்பதனை சீனி மாபியா, கிரிக்கெட் மாபியா, கேஸ் மாபியா போன்றனவே தீர்மானிக்கின்றன.

இந்த ஜனாதிபதியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்தனர் என்ற போதிலும் அவர் நாடாளுமன்றை உதாசீனம் செய்து வருகின்றார்.

ரொஷான் ரணசிங்கவை அழைத்து இந்திய உயர்ஸ்தானிகருடன் சந்திப்பு நடத்தியது உண்மை எனவும் இது அரசியல் சூழ்ச்சி கிடையாது. கிரிக்கெட் தடையை நீக்கிக் கொள்ளவே நாம் முயற்சிக்கின்றோம்.

அரசியல் சூழ்ச்சிகளின் மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் திட்டமில்லை எனவும் மக்களின் ஆணையின் ஊடாகவே ஆட்சி பீடம் ஏறுவோம் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
vagi 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வார இறுதியில் நுவரெலியா – யாழ்ப்பாண மரக்கறி விலைகள்: போஞ்சி கிலோ ரூ. 800!

வார இறுதி நாளான இன்று பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ள விலைப்பட்டியல்கள் வெளியாகியுள்ளன....

1637156252 Damgates 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கந்தளாய் குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு: வினாடிக்கு 750 கன அடி நீர் வெளியேற்றம்!

கந்தளாய் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக, கந்தளாய் குளத்தின் நீர் மட்டம்...

25 688e9a504bdbd
அரசியல்இலங்கைசெய்திகள்

கல்விச் சுமை குறைப்பு, மனநலனுக்கு முன்னுரிமை: நுவரெலியா கல்வி அதிகாரிகளுடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துரையாடல்!

பேரிடர் நிலைமைக்குப் பின்னர் நுவரெலியா மாவட்டத்தின் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவருவது மற்றும் பாடசாலைகளை...

1529329179 Colombo Fort 2
இலங்கைசெய்திகள்

கொழும்பு துறைமுகத்தில் எண்ணெய்க் கசிவு கட்டுப்பாடு: கடற்படை, கடலோரக் காவல் படையின் துரித நடவடிக்கை!

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் உள்ள எரிபொருள் மிதவையில் இன்று காலை (டிசம்பர் 14) ஏற்பட்ட திடீர்...