tamilni 430 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு சிகப்பு எச்சரிக்கை

Share

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு சிகப்பு எச்சரிக்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மறைகரமொன்று வழிநடத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி நீக்கப்பட்டமை பாரதூரமான ஜனநாயக மீறல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு ஜனாதிபதி விடுத்துள்ள சிகப்பு எச்சரிக்கையே இது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதியின் தீர்மானங்களுக்கு Yes Sir Yes Sir என ஆமோதிக்கத் தவறினால் இவ்வாறு பதவி இழக்க நேரிடும் என்பதே இதன் பொருளாகும்.

இந்த நாட்டில் யார் அமைச்சராக இருக்க வேண்டும் யார் அமைச்சராக இருக்கக் கூடாது என்பதனை சீனி மாபியா, கிரிக்கெட் மாபியா, கேஸ் மாபியா போன்றனவே தீர்மானிக்கின்றன.

இந்த ஜனாதிபதியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்தனர் என்ற போதிலும் அவர் நாடாளுமன்றை உதாசீனம் செய்து வருகின்றார்.

ரொஷான் ரணசிங்கவை அழைத்து இந்திய உயர்ஸ்தானிகருடன் சந்திப்பு நடத்தியது உண்மை எனவும் இது அரசியல் சூழ்ச்சி கிடையாது. கிரிக்கெட் தடையை நீக்கிக் கொள்ளவே நாம் முயற்சிக்கின்றோம்.

அரசியல் சூழ்ச்சிகளின் மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் திட்டமில்லை எனவும் மக்களின் ஆணையின் ஊடாகவே ஆட்சி பீடம் ஏறுவோம் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...