அரசியல்இலங்கைசெய்திகள்

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு சிகப்பு எச்சரிக்கை

Share
tamilni 430 scaled
Share

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு சிகப்பு எச்சரிக்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மறைகரமொன்று வழிநடத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி நீக்கப்பட்டமை பாரதூரமான ஜனநாயக மீறல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு ஜனாதிபதி விடுத்துள்ள சிகப்பு எச்சரிக்கையே இது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதியின் தீர்மானங்களுக்கு Yes Sir Yes Sir என ஆமோதிக்கத் தவறினால் இவ்வாறு பதவி இழக்க நேரிடும் என்பதே இதன் பொருளாகும்.

இந்த நாட்டில் யார் அமைச்சராக இருக்க வேண்டும் யார் அமைச்சராக இருக்கக் கூடாது என்பதனை சீனி மாபியா, கிரிக்கெட் மாபியா, கேஸ் மாபியா போன்றனவே தீர்மானிக்கின்றன.

இந்த ஜனாதிபதியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்தனர் என்ற போதிலும் அவர் நாடாளுமன்றை உதாசீனம் செய்து வருகின்றார்.

ரொஷான் ரணசிங்கவை அழைத்து இந்திய உயர்ஸ்தானிகருடன் சந்திப்பு நடத்தியது உண்மை எனவும் இது அரசியல் சூழ்ச்சி கிடையாது. கிரிக்கெட் தடையை நீக்கிக் கொள்ளவே நாம் முயற்சிக்கின்றோம்.

அரசியல் சூழ்ச்சிகளின் மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் திட்டமில்லை எனவும் மக்களின் ஆணையின் ஊடாகவே ஆட்சி பீடம் ஏறுவோம் என தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
20 7
உலகம்செய்திகள்

காசா மக்களுக்கு விழப்போகும் பேரிடி : காசாவின் முழு கட்டுப்பாட்டையும் கைப்பற்றும் இஸ்ரேல்

காசா (Gaza) பகுதியை முழுமையாகக் கைப்பற்றி, காலவரையின்றி அங்கு தங்கள் இருப்பை நிறுவும் திட்டத்தை இஸ்ரேலின்...

14 6
இலங்கைசெய்திகள்

தபால் வாக்குகள் தனியாக எண்ணப்பட மாட்டாது:வெளியான அறிவிப்பு

இன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது தபால் வாக்குகள் தனியாக எண்ணப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது....

13 6
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் 80 இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு

வவுனியாவில் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளினை மீட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார்...

15 6
இலங்கைசெய்திகள்

வெலிக்கடை சிறைக்குள் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு

வெலிக்கடைச் சிறைச்சாலையின் கழிவுநீர் வடிகாண் ஒன்றின் அருகே இருந்து கைத்துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது. வெலிக்கடைச் சிறைச்சாலையின் எல்...