2 6
இலங்கைசெய்திகள்

ரணிலை ஓரங்கட்டுவதில் முனைப்பு காட்டும் சஜித்

Share

ரணிலை ஓரங்கட்டுவதில் முனைப்பு காட்டும் சஜித்

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் இந்நாட்டு அரசியல் களத்தில் இருந்து ரணில் விக்ரமசிங்க முற்றாக ஓரங்கட்டப்பட வேண்டுமென்பதில் சஜித் பிரேமதாச தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சி தங்களுடன் கூட்டிணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலி்ல் போட்டியிடுவதாக இருந்தால் கூட்டணியின் தலைவராக சஜித் பிரேமதாசவே நியமிக்கப்பட வேண்டும் என்று சஜித் தரப்பில் இருந்து கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி கூட்டணியின் செயலாளர் பதவியும் தமக்கே தரப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ருவன் விஜேவர்த்தன மற்றும் தலதா அதுகோரளை ஆகியோர் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ரணில் தரப்புடன் கூட்டிணையாமல் தனித்துப் போட்டியிட்டால் தோல்வி நிச்சயம் என்பதன் காரணமாக ஐ்க்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் பலரும் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வதிலும் ஆர்வம் கொண்டுள்ளதாக அரசியல் ஆர்வளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
MediaFile 13
இலங்கைசெய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு, வட மத்திய, புத்தளம் மற்றும் திருகோணமலைக்கு மழை வாய்ப்பு! 

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (டிசம்பர் 11) வெளியிட்டுள்ளது. அதன்படி,...

25 67abee737d4d3
அரசியல்இலங்கைசெய்திகள்

அரச சேவையில் 2,284 புதிய வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு: அமைச்சரவை அங்கீகாரம்! 

இலங்கை அரச சேவையில் தற்போது நிலவும் 2,284 பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்...

images 6 4
இலங்கைசெய்திகள்

சந்திரிக்காவின் நன்கொடை பாராட்டுக்குரியது: எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்து குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமர்சனம்!

ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு...

25 6939a0f597196
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் இலங்கைக் கரையோரப் பகுதி 143 கி.மீ மாசு: குப்பைகளை அகற்ற 3 வாரங்கள் ஆகும்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோ மீற்றர்...