2 6
இலங்கைசெய்திகள்

ரணிலை ஓரங்கட்டுவதில் முனைப்பு காட்டும் சஜித்

Share

ரணிலை ஓரங்கட்டுவதில் முனைப்பு காட்டும் சஜித்

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் இந்நாட்டு அரசியல் களத்தில் இருந்து ரணில் விக்ரமசிங்க முற்றாக ஓரங்கட்டப்பட வேண்டுமென்பதில் சஜித் பிரேமதாச தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சி தங்களுடன் கூட்டிணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலி்ல் போட்டியிடுவதாக இருந்தால் கூட்டணியின் தலைவராக சஜித் பிரேமதாசவே நியமிக்கப்பட வேண்டும் என்று சஜித் தரப்பில் இருந்து கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி கூட்டணியின் செயலாளர் பதவியும் தமக்கே தரப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ருவன் விஜேவர்த்தன மற்றும் தலதா அதுகோரளை ஆகியோர் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ரணில் தரப்புடன் கூட்டிணையாமல் தனித்துப் போட்டியிட்டால் தோல்வி நிச்சயம் என்பதன் காரணமாக ஐ்க்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் பலரும் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வதிலும் ஆர்வம் கொண்டுள்ளதாக அரசியல் ஆர்வளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
images 2 2
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...

25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து...

ISBS SRILANKA PRISON
இலங்கைசெய்திகள்

பூஸா சிறைச்சாலை மோதல்: கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கைதிகளை இடமாற்றம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர்...

images 1 2
இலங்கைசெய்திகள்

அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விவகாரங்களில் அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை – மன்னார் ஆயர்!

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை...