புதிய கூட்டணிக்கு தயாராகும் சஜித் – நாமல்

21 12

எதிர்க்கட்சித் தலைவரின் அழைப்பின் முக்கிய அரசியல் கலந்துரையாடல் ஒன்றில் கலந்துக்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடல் இன்று(17.05.2025) இடம்பெறவுள்ளது.

நேற்று (16) பிற்பகல் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் நியமனம் தொடர்பான கலந்துரையாடல் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெறவுள்ள நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Exit mobile version