25 683eab4ed7b78
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திடம் சஜித் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

Share

உள்ளூர் சீனி உற்பத்திக்கு 18% வட் வரியும், இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு 50% வட் வரியும் விதிப்பதற்கான காரணத்தை விளக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படி அரசாங்கம் செயல்படுவதாக அரசாங்கம் முன்னர் கூறியதாக தெரிவித்த கருத்தை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித் தலைவர் இன்று நாடாளுமன்றத்தில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடிய பின்னர் உள்ளூர் சர்க்கரைக்கு விதிக்கப்பட்ட 18% வட் வரியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில்,சுனில் ஹந்துன்நெத்தி, ஒரு பொருளுக்கு மட்டும் வட் வரியை நீக்க முடியாது என்று பதில் வழங்கியுள்ளார்.

இலங்கை வரிச் சட்டத்தில் அத்தகைய ஏற்பாடு எதுவும் இல்லை என்று அமைச்சர் ஹந்துன்னெத்தி கூறியுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் வட் வரியைக் குறைப்பதில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...