3 3
இலங்கைசெய்திகள்

உயிரிழந்த பல்கலை மாணவன்: பொலிஸ் நிலையத்தில் குவியும் சக மாணவர்கள்

Share

உயிரிழந்த சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் சரித் தில்ஷான் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குறித்த பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்கள் 5 பேர் பொலிஸ் நிலையம் சென்றுள்ளனர்.

குறித்த வாக்குமூலங்களை சமனல ஏரி பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.

அத்துடன், மாணவன் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட 16 பல்கலைக்கழக மாணவர்களை இன்று(02.05.2025) பொலிஸாரிடம் சரணடையுமாறு கூறப்பட்டுள்ளது.

புஸ்ஸல்லாவ உலகம பகுதியைச் சேர்ந்த 23 வயதான சரித் தில்ஷான், கடந்த 29ஆம் திகதி இரவு தவறான முடிவெடுத்து உயிரிழந்தார்.

பல்கலைக்கழகத்தில் சக மாணவர்கள், குறித்த மாணவனின் ஆடைகளை களைந்து பகிடிவதை மேற்கொண்டமையினால் ஏற்பட்ட மன விரக்தி காரணமாகவே மாணவன் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக இறந்த மாணவனின் உறவினர்கள் புஸ்ஸல்லாவ பொலிஸாரிடமும் முறைப்பாடு அளித்திருந்தனர்.

முறைப்பாட்டின் அடிப்படையில் உடனடியாக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...